திருவள்ளூர் நகராட்சியின் நுழைவுவாய்ப் பகுதியில் கருணாநிதி சிலை திறப்பு
திருவள்ளூர் நகராட்சி அலுவலக உயர்வு வாரையில் பகுதியில் வைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை அமைச்சர் கே. என். நேரு திறந்து வைத்தார்.;
திருவள்ளூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை அமைச்சர் கே. என். நேரு திறந்து வைத்தார்
மறைந்த முன்னாள் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் நகராட்சி அலுவலக நுழைவு வாயிலில் டாக்டர் கலைஞரின் மார்பளவு வெண்கலச் சிலை திறப்பு விழா நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்,தலைமை வகித்தார். திருவள்ளூர் எம்எல்ஏ., வி.ஜி.ராஜேந்திரன், திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன், நகர்மன்றத்தலைவர், உதயமலர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு, மற்றும் கைத்தறி (ம) துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி, ஆகியோர் திருவுருவ சிலையை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் முதன்மை கல்வி அலுவலக உதவியாளர் பணி ஆணை மற்றும் தூய்மை பணியாளர்களுக்கான பணி ஆணைகளை வழங்கப்பட்டது.