திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 81 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

Update: 2021-08-21 15:50 GMT

பைல் படம்.

திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 58 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 81பேர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டத்தில் இன்று வீடுகளின் தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவமனை மூலமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 803 ஆக உள்ளது.

மேலும் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,15,142 ஆகவும், இதில் 1,12,566 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவிற்காக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1772 என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

Tags:    

Similar News