திருவள்ளூரில் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி: அமைச்சர், எம்எல்ஏ பங்கேற்பு

திருவள்ளூர் மேற்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர், எம்எல்ஏ பங்கேற்பு.

Update: 2022-04-27 02:38 GMT

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பில் நடந்த இஃதார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் சா.மு.நாசர், எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் பங்கேற்றனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பில் இஃதார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் சா.மு.நாசர்.திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி. ஜி ராஜேந்திரன் பங்கேற்றனர்.

திருவள்ளூர் நகராட்சி அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பில் இஃதார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், திருவள்ளூர் நகர மன்றத் தலைவர் உதய மலர் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அனைத்து மதத்தினரும் சமாதானத்துடனும் ஒற்றுமையுடனும் இருக்க வேண்டும் என இஸ்லாமியர்கள் தரப்பில் ஜெபிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அனைவருக்கும் நோன்புக் கஞ்சி கொடுக்கப்பட்டது அமைச்சர் சா.மு.நாசர்ர திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வீ.ஜி.ராஜேந்திரன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமியர்கள் நோன்பு கஞ்சி குடித்து நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது அதைத்தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வழங்கினர் இந்நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமியர்கள். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News