காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக குஜராத் சட்டமன்ற உறுப்பினர் பிரச்சாரம்

திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவாக குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவாணி பிரச்சாரம் செய்தார்.

Update: 2024-04-10 00:32 GMT

திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக குஜராத் சட்டமன்ற உறுப்பினர் பிரச்சாரம் செய்தார்.

திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவாக குஜராத்தின் சமூக செயற்பாட்டாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜிக்னேஷ் மேவாணி கிராம பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தமிழகத்தில் புதுவையில் ஒரே கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற இருப்பதால்.தமிழகத்தில் தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.

இன்னும் தேர்தலுக்கு ஒன்பதே நாட்கள் இருப்பதால் இந்நிலையில் திருவள்ளூர் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் தனது தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்து கொண்டிருந்தார்.

அப்போது திருவள்ளுர் அடுத்த கல்யாணகுப்பம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுடன் குஜராத்தின் சமூக போராளியும் காங்கிரஸின் மாநில செயல் தலைவரும் சட்டமன்ற உறுப்பினரான ஜிக்னேஷ் மேவானி வருகை தந்த அவரை சசிகாந்த் செந்தில் கிராம மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.மேலும் ஜிக்னேஷ் மேவானிக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து சால்வை அணிவித்து மாலை அணிவித்து கை குலுக்கி அவரை வரவேற்றனர் . பின்னார் அவர் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவாக கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவாக ஜிக்னேஷ் மேவாணி பிரச்சாரம் மேற்கொண்டது தமிழக அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பிரச்சாரத்தின் போது பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசுவாமி, உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News