குறைந்த வட்டிக்கு பணம் தருவதாக கூறும் நபர்ககளை நம்பி ஏமாற வேண்டாம்

குறைந்த வட்டிக்கு பணம் தருவதாக கூறும் நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் - பொதுமக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட எஸ்பி எச்சரிக்கை

Update: 2021-08-22 14:04 GMT

குறைந்த வட்டிக்கு பணம் தருவதாக கூறும் நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என இன்று பொதுமக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின்படி லோன் தருவதாக கூறி தமிழகம் முழுவதும் நூதன முறையில் 15லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் பறித்த நபர்கள் திருவள்ளூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட காவல் துறையின் சார்பாக உங்கள் சுய விவரங்கள் அடங்கிய தொகுப்புடன், குறைந்த வட்டியில் தேவையான பணம் தருவதாக கூறும் நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஐபிஎஸ் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News