செவ்வாய்பேட்டை ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் : தலைவர் டெய்சி ராணி அன்பு தொடங்கி வைத்தார்

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்பேட்டையில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை ஊராட்சி தலைவர் செய்சி ராணி அன்பு தொடங்கிவைத்தார்.

Update: 2021-06-27 11:50 GMT

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்பேட்டை ஊராட்சியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை பஞ்சாயத்து தலைவர் டெய்சி ராணி அன்பு தொடங்கிவைத்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் பொருட்டு பல்வேறு கட்ட நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட நியாய விலை கடை அருகில் கொரோனா தடுப்பூசி முகாமினை ஊராட்சி மன்ற தலைவர் டெய்சி ராணி அன்பு தொடங்கி வைத்தார்

.இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பூங்கொடி, மண்டல அலுவலர் தமிழ்செல்வி மற்றும் ஊராட்சி செயலாளர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News