திருவள்ளூரில் 838 பேருக்கு கொரோனா; 4 பேர் பலி

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 838 பேருக்கு கொரோனா தொற்று உறுதி என மாவட்ட நிர்வாகம் தகவல்.

Update: 2021-04-26 16:05 GMT

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதன் வெளிப்பாடாக இன்று ஒரே நாளில் 838 பேருக்கு புதிதாக உருவாகி உள்ளது. மேலும், 546 பேர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டத்தில் இன்று 4 பேர் கொரோனாவின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் மாவட்டத்தில் இன்று வீடுகளில் தனிமைப்படுத்தல் மற்றும் மருத்துவமனை மூலமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 5262 ஆக உள்ளது.

மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,480 ஆகவும் இதில் 50,453 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டத்தில் இதுவரை கொரோனாவிற்காக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 765 ஆக உள்ளது என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

Tags:    

Similar News