திருவள்ளூரில் 1204 பேருக்கு கொரோனா; 17 பேர் பலி

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 1204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; மேலும் டிஸ்சார்ஜ் 1309 என மாவட்ட நிர்வாகம் தகவல்.

Update: 2021-05-11 17:27 GMT

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலையானது தீவிரமாக பரவி வருகின்றது. இதன் வெளிப்பாடாக  ஒரே நாளில் மாவட்டத்தில் அதிகபட்சமாக 1204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1309 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டத்தில்  17 பேர் கொரோனாவின் காரணமாக உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில்  வீடுகளில் தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவமனை மூலமாக சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 8109 ஆக உள்ளது.  மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 73,443 ஆகவும், இதில் 64,413 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 921 ஆக அதிகரித்துள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

Tags:    

Similar News