அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரிப்பு

திருவள்ளூரில் காங்கிரஸ் கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.

Update: 2024-04-14 08:02 GMT
திருவள்ளூரில் அம்பேத்கர் சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவித்தனர்.

சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி திருவள்ளூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆயில் மில் பகுதியில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு பின்னர் வீடு வீடாகச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

ஏப்ரல் 14தமிழ் புத்தாண்டு மற்றும் சட்டமேதை அம்பேத்கரின் பிறந்தநாள் விழா நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி திருவள்ளுவர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நகர தலைவர் ஜோஷி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் உள்ள அம்பேத்கரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


பின்னர் திருவள்ளூர் தனி தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து ஆயில் மில் மற்றும் பூங்கா நகர் பகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் அஸ்வின், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் திவாகர் மற்றும் மாவட்ட பொருளாளர் மணவாளன் ஆகியோர் கலந்து கொண்டு கடைகள் மற்றும் வீடுகளில் துண்டு பிரசுரங்களை கொடுத்து வாக்கு சேகரித்தனர். இந்நிகழ்ச்சியின் போது நிர்வாகிகள் தளபதிமூர்த்தி செல்வம், மாயாண்டி, பிரவீன், பாபி, அசேன்பாஷா, பிரகாஷ், சபீர், பார்த்தசாரதி, கார்த்திக், அப்துல்ஹமீது உள்ளிட்ட ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News