திருவள்ளூர் மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு விருது

திருவள்ளூர் மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கப்பட இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-24 04:15 GMT

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்/ 

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வௌியிட்ட செய்திக்குறிப்பில் ஒன்றில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கலைத்துறையில் சாதனைகள் படைத்துள்ள 18 வயது முதல் அதற்குட்பட்டவர்களுக்கு கலை இளமணி விருது, 19 முதல் 35 வயது வரை கலை வளர்மணி விருது, 36 முதல் 50 வயது வரை கலை சுடர்மணி விருது, 51 முதல் 65 வயது வரை கலை நன்மணி விருது, 66 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கலை முதுமணி விருது என விருதுகள் வழங்கிட தமிழக அரசு ஆணையை வெளியிட்டுள்ளது.

எனவே, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பரதநாட்டியம், குரலிசை,தவில், நாதஸ்வரம்.வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக்கருவிகள் இசைக்கும் கலைஞர்கள், ஓவியம், சிற்பம், சிலம்பாட்டம், நாடகக் கலைஞர்கள் மற்றும் கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், கைச்சிலம்பாட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைகளை தொழிலாக கொண்டுள்ள கலைஞர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

விருதுகள் பெற கலைஞர்கள் தங்களது சுய விவரம்,நிழற்படம் இணைத்து, அவர்களது வயதுச்சான்று, முகவரிச்சான்றிற்காக ஆதார் அட்டை நகல் மற்றும் கலை அனுபவ சான்றுகளின் நகல்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் உதவி இயக்குநர், கலை பண்பாட்டுத்துறை, சதாவரம், ஓரிக்கை அஞ்சல், சின்ன காஞ்சிபுரம்-631502 என்ற முகவரிக்கு வரும் இம்மாதம் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-27269148 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.

.

Tags:    

Similar News