திருவள்ளூரில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Anganwadi Worker - திருவள்ளூரில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-09-27 02:00 GMT

திருவள்ளூரில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Anganwadi Worker -திருவள்ளூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கேஸ் சிலிண்டர் தொகையை பில்லில் உள்ளவாறு காலம் தாழ்த்தாமல் உடனே வழங்க வேண்டும், பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும், உள்ளூர் பணியிட மாறுதல் உடனடியாக வழங்க வேண்டும், மினி மையம் பணியாளர்களுக்கு உதவியாளர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும், செல்போன் கொடுத்து நான்கு  ஆண்டுகள் முடிந்தும் பழுதடைந்து உள்ள நிலையில் உடனே புதிய செல்போன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 300-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் கேஸ் சிலிண்டர்களை வைத்து ஆட்சியர் அலுவலக நுழைவுவாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News