ஊத்துக்கோட்டை அருகே தாசில்தார் என கூறி மூதாட்டியிடம் நகை பறித்த பெண்

Crime News in Tamil -ஊத்துக்கோட்டை அருகே தாசில்தார் என கூறி மூதாட்டியிடம் நகை பறித்த பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-09-29 02:15 GMT
நகை பறிகொடுத்த மூதாட்டி.

Crime News in Tamil -திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த இலச்சுவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 55 வயதுடைய எல்லாம்மள் என்ற கூலி தொழிலாளி கணவனை இழந்து வயதான தாயுடன் தனியாக வசித்து வருகிறார். இவரிடம் புதிதாக வந்துள்ள தாசில்தார் எனக் கூறி 30 வயது தக்க பெண் அறிமுகம் ஆகி உள்ளார். பின்னர் அந்த மூதாட்டியிடம் உங்களுக்கு  முதியோர் உதவித்தொகை வாங்கித் தருகிறேன் என கூறி செல்போனில் புகைப்படம் எடுக்க வேண்டும், அப்போது கழுத்தில் நகை இருக்கக் கூடாது என கூறி உள்ளார்.இதனை நம்பிய  மூதாட்டி நகையை கழட்டி கீழே வைத்தார். அப்போது அந்த பெண்  நகையை திருடி இருசக்கர வாகனத்தில் தப்பி விட்டார். போலியாக தாசில்தார் வேடமிட்டு மூதாட்டியிடம் நகை திருடிய பெண்ணை ஊத்துக்கோட்டை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News