திருவள்ளூர் அருகே ஆம்புலன்ஸ் மீது இருசக்கர வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே நோயாளியை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.

Update: 2024-10-14 10:30 GMT

திருவள்ளூர் அருகே ஆம்புலன்ஸ் வாகனம் மீது மோதி இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் அடுத்த என்.ஜி. ஓ.காலனி பகுதியைச் சேர்ந்தவர் மஸ்தான் அவருடைய மகன் காஜா மஸ்தான்  (வயது30 ).நேற்று  வீட்டிலிருந்து பூந்தமல்லி நோக்கி சென்ற பின் மீண்டும் மாலை வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

அப்போது அரண்வாயில் பகுதியில் சாலை பணி நடந்து வருவதால் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

இதனால் அவ்வழியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் இருந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு நோயாளியை ஏற்றிச் சென்ற 108 ஆம்புலன்ஸ் மீது பூந்தமல்லியில் இருந்து திருவள்ளூர் நோக்கி தனது யமஹா இருசக்கர வாகனத்தில் சென்ற காஜா மஸ்தன் ஆம்புலன்ஸ் வாகனம் மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அவரை மற்றொரு ஆம்புலன்ஸ் வர வைக்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து உடற்கூறு ஆய்வு முடிந்த பின் அவர் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையானது மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் அருகே உயிர் காக்கக்கூடிய ஆம்புலன்ஸ் வாகனம் மீது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News