திருவள்ளூரில் தனியார் தொழிற்சாலை இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை

Latest Suicide News - திருவள்ளூரில் தனியார் தொழிற்சாலை இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2022-08-19 02:45 GMT

பைல் படம்.

Latest Suicide News -தஞ்சாவூர் மாவட்டம் மன்த் திடல் கிராமத்தைச் சேர்ந்தவர் உதயகுமார் (24) இன்ஜினியர். இவர் நண்பர்களுடன் திருவள்ளூர் அருகே மணவாள நகரில் தங்கி திருவள்ளூர் அடுத்த மப்பேடு கிராமப் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இன்ஜினியராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக உதயகுமாரின் தாய் உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிர்ழந்த நிலையில் தாய் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் உதயகுமார் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து தங்கியிருந்த அறையில் நண்பர்கள் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவருடன் தங்கி இருந்த சக நண்பர்கள் மாலை வேலை முடித்துவிட்டு அறைக்கு வந்து பார்த்தபோது, தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் உதயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய் இறந்த சோகத்தை தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News