மைத்துனி கொலை அக்கா கணவர் உட்பட 2 பேர் கைது

கிளாம்பாக்கம் செல்லியம்மன் நகர் பகுதியில் மைத்துனியை கொலை செய்த அக்கா கணவர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-05-09 16:45 GMT

கூடுவாஞ்சேரி அடுத்த கிளாம்பாக்கம் செல்லியம்மன் நகரை சேர்ந்த பார்த்திபன் மனைவி சௌமியா (28) இவரது அக்கா சந்தியா (30). இந்நிலையில் சௌமியா தனது சகோதரியான சந்தியாவிற்கு மொபைல் போனில் சமூக வலைத்தளங்கள் பற்றி சொல்லிக் கொடுத்துள்ளார். இதனை அடுத்து சந்தியா மொபைல் போன் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இது அவரது கணவர் சந்திரனுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சந்தியா வலைத்தளம் உபயோகிப்பதற்கு சௌமியா தான் காரணம் என முடிவு செய்த சந்திரன் அவரை கொலை செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளார்.

இதனை அடுத்து சந்திரன் அவரது நண்பர் ராஜன் ஆகியோர் மே 4ஆம் தேதி சௌமியா வீட்டிற்கு சென்று அவரை சரமாரியாக கத்தியால் வெட்டி அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தோர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 5ஆம் தேதி உயிரிழந்தார்

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செய்தவர்களை தேடி வந்த நிலையில் சென்னை நங்கநல்லூர் சந்திரன் 38 சைதாப்பேட்டை ராஜன் 32 ஆகியோரை நேற்று கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News