ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு 108 பெண்கள் திருவிளக்கு பூஜை

பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் ஆவணி மாத பௌர்ணமி முன்னிட்டு 108 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை விமர்சையாக நடைபெற்றது.;

Update: 2024-08-20 04:00 GMT

பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோவிலில் ஆவணி மாதம் பௌர்ணமி முன்னிட்டு திருவிளக்கு பூஜையில் 108 பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பிரசித்தி பெற்ற பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோயிலில் ஆவணி மாதம் பௌர்ணமியை முன்னிட்டு 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றங்கரை அருகே சுயம்புவாக எழுந்தருளிய பிரசித்தி பெற்ற ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாதம் ஆடித்திருவிழாவானது தொடர்ந்து 14 வார காலம் வெகு விமர்சையாக நடைபெறும் இத் திருவிழாவில் சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மட்டுமல்லாது

ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, கர்நாடகா, என பல்வேறு அண்டை மாநிலங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சனிக்கிழமை பெரியபாளையம் வந்து இரவு தங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் வைத்து,மொட்டை அடித்து,அம்மனை வழிபட்டு செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று ஆவணி மாதம் பௌர்ணமி முன்னிட்டு உலக நன்மை வேண்டியும்,பொதுமக்கள் நோய் இன்றிவாழவும்,

பவானி அம்மன் திருக்கோவில் வளாகத்தில்108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை விமர்சியாக நடைபெற்றது.பூஜையில் கலந்துகொண்ட பெண்கள் குத்து விளக்கேற்றி குங்குமம், மஞ்சள், மலர்களால்அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர்.நேற்று பௌர்ணமியை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கும் பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதன் பின்னர் உற்சவர் ஸ்ரீ பவானி அம்மனுக்கு பால், தயிர்,பன்னீர், சந்தனம், குங்குமம்,மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால், திரு ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு ஶ்ரீ பவானி அம்மனுக்கு

தீபா, தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து உற்சவர் வெள்ளி காப்பு அலங்காரத்தில் கோயிலை மாட வீதி உலா மூன்று முறை வந்து பக்தர்களுக்கு

அருள் பால்வித்தார். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.இதில் கோயில் அறங்காவலர் அஞ்சன்லோகமித்ரா, செயல் அலுவலர் பிரகாஷ், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News