திருவள்ளூரில் 1049 பேருக்கு கொரோனா -8 பேர் பலி

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 1049 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; மேலும் டிஸ்சார்ஜ் 857 என மாவட்ட நிர்வாகம் தகவல்.;

Update: 2021-05-02 17:10 GMT

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 1049 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; மேலும் டிஸ்சார்ஜ் 857 என மாவட்ட நிர்வாகம் தகவல்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே கொரோனா தொற்று உறுதி செய்யபட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதன் வெளிப்பாடாக இன்று ஒரே நாளில் 1049 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 857 பேர் முழுமையாக கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இன்று கொரோனாவின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உள்ளது. மாவட்டத்தில் இன்று வீடுகளில் தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவமனை மூலமாக சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 5534 ஆக உள்ளது. மேலும் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 61, 385 ஆகவும், இதில் 55, 036 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவிற்காக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 815 ஆக உள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

Tags:    

Similar News