புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த அமைச்சர் நாசர்

திருவேற்காடு பகுதியில் புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு பால்வளத்துறை அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்.

Update: 2021-09-05 16:33 GMT

திருவேற்காடு நகராட்சி பகுதியில் புதிய மின்மாற்றியை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்.

திருவேற்காடு நகர பகுதியில் இன்று மாலை புதிய மின் மாற்றியை பொது மக்கள் பயன்பாட்டிற்காக  பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர்  திறந்து வைத்தார்.

இதில் திருவேற்காடு நகர செயலாளர் என்.இ.கே. மூர்த்தி, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பவுல், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரபு கஜேந்திரன் மற்றும் வட்ட  செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News