ஆவடி மருத்துவமனை கட்டிடத்தை அமைச்சர் எ.வ.வேலு இன்று பார்வையிடுகிறார்

ஆவடி மருத்துவமனை கட்டிடத்தை அமைச்சர் எ.வ.வேலு இன்று பார்வையிடுகிறார்

Update: 2022-05-13 02:45 GMT

அமைச்சர் எ.வ. வேலு.

ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மருத்துவமனை வளாகத்தில் 1.79 ஏக்கர்  பரப்பளவில் பல்நோக்கு மருத்துவமனை வளாகம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இங்கு தரைதளம் உள்ளிட்ட 3 தளங்களுக்கு இவ்வளாகத்தில் வடிவமைக்கப்பட்டு சுமார் ரூ. 27கோடி மதிப்பீட்டில் 54,235 சதுர அடிப் பரப்பளவில் இக்கூடுதல் மருத்துவமனைக் கட்டிடம் பொதுப் பணி துறையால் கட்டப்பட்டு வருகிறது . இந்த பணிகளை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை  அமைச்சர்  எ.வ.வேலு இன்று  பார்வையிட உள்ளார்.

Tags:    

Similar News