ஆவடி: முன்களப்பணியாளர்களுக்கு சிறுதானிய கஞ்சி, காய்கறி-அமைச்சர் வழங்கினார்

ஆவடி அருகே முன்களப்பணியாளர்களுக்கு சிறுதானிய கஞ்சி மற்றும் காய்கறிகளை பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் வழங்கினார்.

Update: 2021-06-07 04:35 GMT

முன்களப்பணியாளர்களுக்கு சிறுதானிய கஞ்சி மற்றும் காய்கறிகளை அமைச்சர் நாசர் வழங்கினார்.

கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்ப்படுத்தப்பட்ட நிலையில் முன்களப்பணியாளர்கள் தங்களது பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களை ஊக்குவிக்கும் விதமாக சென்னை ஆவடியில் சிறுதானிய கஞ்சி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது. மாம் ஃபார் இந்தியா என்ற நிறுவனம் மற்றும் மாநகராட்சி இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சியிலு பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் கலந்து கொண்டு துப்புரவு பணியாளர்கள், காவல் துறையினர் மற்றும் ஊடகத்துறையினருக்கு வழங்கினார்.

Tags:    

Similar News