ஆம்பூர்: வீட்டில் திருடிய வழக்கில் ஒருவர் கைது - நகைகள் பறிமுதல்

ஆம்பூர் அருகே, மங்கலாபுரம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கில், இளைஞர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-09-17 16:00 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மங்கலாபுரம் பகுதியில், கடந்த வாரம் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை நடைபெற்றதாக நகர காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து, கொள்ளை வழக்கு தொடர்பாக, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த அருணா ( வயது 20) என்ற இளைஞர்,  நகை கொள்ளையடித்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 8 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீசார், அவரை குற்றவியல் நடுவர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News