மனைவியின் கள்ளக்காதலனை போட்டுத் தள்ளிய கணவன் போலீசில் சரண்

ஆம்பூர் அருகே மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நபரை வெட்டிக்கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த  கணவன்

Update: 2021-08-04 12:03 GMT

காவல் நிலையத்தில் சரணடைந்த டில்லி

ஆம்பூர் அடுத்த பாலூர் பகுதியை சேர்ந்தவர் டில்லி (வயது 46)  இவரது மனைவி லட்சுமியுடன் வசித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி (வயது 52) என்பவருடன் லட்சுமிக்கு திருமணத்திற்கு மீறிய உறவு வைத்திருந்துள்ளார்

இதனால் பல முறை இருவரையும் கண்டித்துள்ளார் டில்லி. ஆனால் அதையும் மீறி உறவு வைத்திருந்ததால் ஆத்திரம் அடைந்த டில்லி, கத்தியை எடுத்துகொண்டு கோவிந்தசாமி வீட்டிற்கு சென்று அங்கு அமர்ந்திருந்த கோவிந்தசாமியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியுள்ளார் 

ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த கோவிந்தசாமியை  உடனடியாக அப்பகுதி மக்கள் மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக  தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த உமராபாத் காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வந்த நிலையில்,  ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் டில்லி சரணடைந்தார். இதுகுறித்து ஆம்பூர் துணை கண்காணிப்பாளர் சரவணன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்

ஆம்பூர் அருகே மனைவி கள்ளத்தொடர்பு வைத்திருந்த கள்ளக்காதலனை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

Similar News