நெல்லை அருகே வாலிபர் கொடூர கொலை: பதற்றம், போலீஸ் குவிப்பு

நெல்லை வடுவூர்பட்டியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர் கொலை. சம்பவம் குறித்து தனிப்படைகள் விசாரணை.

Update: 2021-09-13 17:47 GMT

நெல்லை அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர் கொலை. சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை.

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடுவூர்பட்டி டாஸ்மாக் அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை நடந்திருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்யபட்டு இறந்த நபர் கீழசெவல் நயினார் குளத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் சங்கரசுப்பிரமணியன்(37) என தெரியவந்தது.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி மோப்ப நாய்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டும், தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுபடி 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இக்கொலை முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா, வேறு ஏதும் காரணங்களுக்காக நடைபெற்றதா என விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News