நெல்லையில் மினி லாரி- கார் மோதல்; இரண்டு சிறுவர்கள் பரிதாப உயிரிழப்பு

கூடன்குளம் கடற்கரை சாலையில் மினி லாரி மீது கார் மோதிய விபத்தில் இரண்டு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Update: 2021-08-07 09:12 GMT
விபத்தில் நாெறுங்கிய கார்.

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்நதவர் ஜோசப் இவருக்கு லிஜோ,(14) ஜிபின் (11) இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் தனது குடும்பத்தினருடன் வேளாங்கன்னி மாதா கோவிலுக்கு காரில் சென்று விட்டு திரும்பினார். 

அந்த கார் கூடன்குளம் கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் காய்கறி ஏற்றிச் வந்த மினி லாரி பின்பக்கம்  மோதியது. இதில் காரில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த இரண்டு சிறுவர்கள் லிஜோ,(14) ஜிபின் (11) ஆகியோர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே இறந்தனர்.

ஜோசப் மற்றும் காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் ஆகியோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கூடன்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News