மானூர் ஒன்றிய சேர்மேனாக 22 வயது பொறியியல் பட்டதாரி ஸ்ரீலேகா தேர்வு

மானூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக 22 வயது பொறியியல் பட்டதாரி ஸ்ரீலேகா தேர்வு செய்யப்பட்டார்.

Update: 2021-10-22 11:47 GMT

மானூர் ஒன்றிய சேர்மேனாக தேர்வு செய்யப்பட்ட 22 வயது இளம் பொறியாளர்  ஸ்ரீலேகா

திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியத்தில் 25 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் உள்ளது. இதில் திமுக 17 இடங்களில் தனித்து வெற்றி பெற்றது.

ஐந்து இடங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் கைப்பற்றினர். இரண்டு இடங்களை அதிமுக கைப்பற்றியது. பிஜேபி ஒரு இடத்தை கைப்பற்றியுள்ளது.

புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 20ம் தேதி நடைபெற்றது.

ஒண்ணாவது வார்டு மல்லிகா, 3வது வார்டு சுதாராணி, ஆறாவது வார்டு சண்முகசுந்தரி, ஒன்பதாவது வார்டு கலைச்செல்வி, 11வது வார்டு நிஷா, 12வது வார்டு சின்னத்துரை, 13வது வார்டு இன்பராஜ், 16வது வார்டு சுரேஷ், 17வது வார்டு சுகந்தா தேவி, 18-வது வார்டு நயினார் முகம்மது, 19வது வார்டு ஸ்ரீலேகா, 20 வது வார்டு பாச குமாரி, 21வது வார்டு மாரி பிரியா, 22வது வார்டு முத்துமாரி, 23வது வார்டு தேவி முப்பிடாதி, 24வது வார்டு முகமது காசிம், 25வது வார்டு முஹம்மது இஸ்மாயில் ஆகிய திமுக கவுன்சிலர்கள்,

இரண்டாவது வார்டு முத்துப்பாண்டி, நாலாவது வார்டு உடையமை, 5-ஆவது வார்டு உமாதேவி, ஏழாவது வார்டு ஜெனட், 15வது வார்டு மாலதி ஆகிய சுயேட்சை ஒன்றிய கவுன்சிலர்கள்,

8வது வார்டு கோபாலகிருஷ்ணன், 14வது வார்டு உச்சி மாகாளி ஆகிய அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள், 10வது வார்டு பால் முருகன் பிஜேபி ஒன்றிய கவுன்சிலர் ஆகிய 25 பேர் பதவியேற்றக் கொண்டனர்.

இன்று ஒன்றிய குழு தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் 19வது வார்டு திமுக கவுன்சிலராக  தேர்வு செய்யப்பட்ட ஸ்ரீலேக ஒன்றி சேர்மேன் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை இதனையடுத்து இவர் போட்டியின்றி ஒரு மனதாக சேர்மேனாக தேர்வு செய்யப்பட்டார்.

19வது வார்டில் போட்டியிட்டு 1200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இளம் வயதிலேயே தன்னை சேர்மனாக தேர்ந்தெடுத்த, திமுக தலைவர், மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர், ஒன்றிய நிர்வாகிகள், ஒன்றிய குழு உறுப்பினர்கள்  அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ள ஸ்ரீலேகா மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது தனது முதல் கடமை என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News