எஸ்பி வேலுமணி தூத்துக்குடிக்கு திடீரென்று வருகை தந்தது ஏன் ? பரபரப்பு தகவல்

லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கும் நிலையில் திடீரென்று எஸ்பி வேலுமணி தூத்துக்குடிக்கு வருகை தந்தது ஏன் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2021-08-11 11:57 GMT

முன்னாள் அமைச்சர் வேலுமணி (பைல் படம்)

தூத்துக்குடி வாகைகுளம் விமானநிலையத்திற்கு காலை 7.30மணிக்கு விமானத்தில் வந்த எஸ்பி. வேலுமணி திருச்செந்தூருக்கு செல்வதாக. கூறிவிட்டு அங்கு செல்லவில்லை.

நேற்று தொடங்கி இன்றுவரை அவரது இல்லம் தொடங்கி ஆதரவாளர்கள் வீடுவரை லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வரும் சூழலில் அவரது வருகை பரபரப்பாக பார்க்கப்பட்டது.

அவர் நெல்லை அரசு ஒப்பந்ததாரரை சந்தித்ததாகவும் அடுத்து பல்வேறு இடங்களில் யாகம் நடத்தியதாகவும் தகவல்கள் ரெக்கை கட்டி பறந்தன

அனைத்து யூகங்களுக்கு விடை சொல்லும்விதமாக எஸ்பி வேலுமணி 3.45மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் விமானத்தில் பயணம் மேற்கொண்டார்.

அவர் கோவிலுக்கு வந்தார? அல்லது வழக்குகில் அரசுக்கு தூதுவிடும் விதமாக தென்மாவட்ட முக்கிய பிரமுகரின் நண்பரான தொழிலதிபரை சந்தித்தாரா? லஞ்ச ஒழிப்பு பிரிவில் பணியாற்றும் முக்கிய அதிகாரிக்கு தொடர்புடைய நபர்கள் மூலம் வழக்கில் இருந்து தப்பிக்கும் விதமான செயல்களை செய்து உதவ வேண்டும் என அதிகாரியின் உறவினர்களை சந்தித்தார? என்பது போன்ற முடிச்சுகளுக்கு இனிதான் விடை தெரியவாய்ப்பு உள்ளது.

Tags:    

Similar News