ஊரக உள்ளாட்சி தேர்தல்: அதிமுக சார்பில் கூடுதல் பொறுப்பாளர்கள் நியமனம்

ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து திருநெல்வேலி மாவட்டத்திற்கு தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்ககளை அறிவித்துள்ளனர்.

Update: 2021-09-13 15:30 GMT

பைல் படம்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரின் முக்கிய அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் 6-10-2020, 9-10-2020 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக மாவட்டம் வாரியாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களுடன், மேலும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதை தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திற்கு கழக மகளிர் அணி துணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.எம்.ராஜலட்சுமி, கழக வழிகாட்டு குழு உறுப்பினரும், கழக தேர்தல் பிரிவு இணைச் செயலாளருமான கோ.பாலகிருஷ்ணன் முன்னாள் எம்பி., கழக அமைப்புச் செயலாளர் பி.ஜி. ராஜேந்திரன் முன்னாள் எம்எல்ஏ., ஆகியோர் திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

Tags:    

Similar News