மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்த ஆட்சியர்

மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சார விளம்பர வாகனத்தை, நெல்லை மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Update: 2021-10-21 13:45 GMT

மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சார வீடியோ வாகனத்தை,  மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத் துறையின் சார்பில் மழைநீர் சேகரிப்பு  விழிப்புணர்வு பிரச்சார செய்தி மக்கள் தொடர்புத் துறையின் விளம்பர வாகனத்தை, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 1 மாநகராட்சி, 2 நகராட்சிகள், 18 பேரூராட்சிகள், 9 ஊராட்சி ஒன்றியங்களில் அனைத்திலும் வடகிழக்கு பருவமழை காலத்தினை முன்னிட்டு பொதுமக்கள் அனைவருக்கும் மழைநீர் சேகரிப்பதின் அவசியத்தையும், அதன் பயனையும் அறியச் செய்யும் வகையிலும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை விரைந்து அமைத்திடவும், விழிப்புணர்வு எற்படுத்தும் விதமாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் துறையின் மேலாண்மை இயக்குநர் தட்சணாமூர்த்தி ஆலோசனையின்படி மழைநீர் சேகரிப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. 

இந்த நிகழ்வில், விழிப்புணர்வு துண்டு பிரசுரமும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ஆர்.கணேஷ்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.ஜெய அருள்பதி, உதவி நிர்வாக பொறியாளர் தி.கனகராஜ், உதவி பொறியாளர் ஜி.குமார்,உதவி மக்கள் தொடர்பு அலுவலர் எம்.எஸ்.மகாகிருஷ்ணன், துணை நிலநீர் வல்லுநர் முனைவர் என்.முத்துகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News