அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்த இருவர் கைது
தாழையூத்து பகுதியில் அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்த லாரி மற்றும் இருவரை போலீசார் கைது செய்தனர்
நெல்லை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
நெல்லை மாவட்டம், தாழையூத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் சாவித்திரி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தென்கலம் விலக்கில் வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், அரசு அனுமதி இல்லாமல் மணல் ஏற்றி வந்தது தெரிந்தது.
அவர்களை பிடித்து விசாரணை செய்ததில், கரையிருப்பை சேர்ந்த பேச்சிமுத்து(30), தாழையூத்தை சேர்ந்த லட்சுமணன்(31) ஆகியோர் திருட்டுத்தனமாக சரளை மணல் ஏற்றி வந்தது தெரிந்தது. இதனைத் தொடர்ந்து, உதவி ஆய்வாளர் அனுமதி சீட்டு இல்லாமல் மணல் ஏற்றி வந்த இருவரையும் கைது செய்தார். மேலும் மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரியையும், 3யூனிட் மணலையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.