நெல்லை ராயல் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியனான சேபாக் சூப்பர் கிங்ஸ் வீழ்த்தியது

Today Cricket News in Tamil -நெல்லை ராயல் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியனான சேபாக் சூப்பர் கிங்ஸ் வீழ்த்தியது

Update: 2022-06-24 03:30 GMT

Today Cricket News in Tamil -சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியனான சேபாக் சூப்பர் கிங்ஸ் அணியை முதல் போட்டியில் வீழ்த்தியது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள். திருநெல்வேலி, திண்டுக்கல், சேலம், கோவை ஆகிய நான்கு நகரங்களில் நடைபெறுகிறது. முதல் 6 போட்டிகள் திருநெல்வேலியில் உள்ள சங்கர்நகர் விளையாட்டு மைதானத்தில் இன்று துவங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான செபாக் சூப்பர் கில்லீஸ் -- நெல்லை ராயல் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த நெல்லை ராயல் கிங்ஸ் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு, 184 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியை சேர்ந்த சஞ்சய் யாதவ் 87 ரன்கள் எடுத்தார்.

185 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சேபாக் கில்லீஸ் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆட்டத்தின் போக்கை கௌசிக் காந்தி மாற்றினார். அவர் 64 ரன்கள் எடுத்தார். இறுதியில் செபாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து, 184 ரன்கள் எடுத்தனர். கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 14 ரன்கள் எடுத்தனர். இதனால் ஆட்டம் டிரா ஆனது. இதனையடுத்து சூப்பர் ஓவர் மூலம் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டது. முதலில் பேட் செய்த சேபாக் சூப்பர் கில்லீஸ் 6 பந்துகளில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்தனர். மீண்டும் களமிறங்கிய நெல்லை ராயல் கிங்ஸ் அணி 5 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.இதன் மூலம் நெல்லை ராயல் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியனான சேபாக் சூப்பர் கில்லிஸ் அணியை வென்றுள்ளது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News