எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் விறு, விறு செயல், நெல்லை மக்களிடையே வரவேற்பு

நெல்லையில் எம்எல்ஏ நயினார் நாகேந்திரனின் விறு, விறு செயல்பாடுகள் மக்களிடையே வரவேற்பை பெற்றது.

Update: 2021-06-18 03:09 GMT

நெல்லை மாவட்டம் பழவூர் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுக்க உடனடியாக நடவடிக்கை எடுத்தார் எம்எல்ஏ நயினார்நாகேந்திரன்

 நெல்லை அடுத்துள்ள பழவூர் பகுதி பொதுமக்கள் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அதிகாரிகளை தொடர்பு கொண்ட சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன்.

நெல்லையை அடுத்த சுத்தமல்லி அருகே உள்ள நெல்லை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  பழவூர் கிராமத்திற்கு  சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் சென்றார். அப்போது அப்பகுதி பொதுமக்கள் அவரிடம் எங்கு தெருவிளக்கு குடிநீர் வசதி சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உடனடியாக பாப்பாக்குடி யூனியன் வட்டார வளர்ச்சி அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பழவூர் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கோரிக்கை வைத்த மறுநிமிடமே அதிகாரிகளை தொடர்பு கொண்டு அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட சட்டமன்ற உறுப்பினரின் செயலுக்கு அப்பகுதி கிராம மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Tags:    

Similar News