பண்ணையாளர்களுக்கு உற்பத்தியைப் பெருக்குதல் பற்றிய கால்நடைக் கண்காட்சி

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட பண்ணையாளர்களுக்கு உற்பத்தியைப் பெருக்குதல் பற்றிய மண்டல அளவிலான கால்நடைக் கண்காட்சி

Update: 2022-04-28 04:52 GMT

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிதி உதவியுடன் நடைபெறும் தேசிய நச்சுயிரி மற்றும் நுண்ணுயிரி சேகரிப்பு திட்டத்தில் பட்டியலின மக்களுக்கான உப திட்டத்தின் கீழ் 'தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட பட்டியலின பண்ணையாளர்களுக்கு கால்நடை மற்றும் கோழிகளில் நோய் மேலாண்மை மூலம் உற்பத்தியைப் பெருக்குதல்" பற்றிய மண்டல அளவிலான கால்நடைக் கண்காட்சி 29ஃ04ஃ2022 (வெள்ளிக்கிழமை) மற்றும் 30ஃ04ஃ2022 (சனிக்கிழமை) ஆகிய நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை திருநெல்வேலி இராமையன்பட்டியில் அமைந்துள்ள கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது.

இக்கண்காட்சியில் தமிழகத்தில் உள்ள வெள்ளாடுகள், செம்மறியாடுகள், கோழி மற்றும் நாய் இனங்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. மேலும்,கால்நடை வளர்ப்பு பற்றிய தொழில்நுட்பங்கள், முறைகள் மற்றும் பராமரிப்பு சம்மந்தமான உபகரணங்கள், தீவன தொழில்நுட்பங்கள், கால்நடை நோய்த்தடுப்பு தொழில்நுட்பங்கள், கால்நடை உற்பத்தி பொருட்கள் மற்றும் மதிப்பூட்டிய பால் மற்றும் இறைச்சி பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளது. எனவே, கால்நடை வளர்ப்போர், வேளாண் பெருமக்கள், கால்நடை வளர்ப்பில்ஆர்வம் உள்ளவர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் மாணவ, மாணவியர் இக்கண்காட்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News