கொரோனா தொற்றுக்கு நீதித்துறை நடுவர் நீஷ் உயிரிழப்பு
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நீதித்துறை நடுவர் நீஷ் காலமானார்.
நெல்லை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீஷ் கொரனா நோய்தொற்று பாதிக்கப்பட்டு தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆக பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது ஏப்ரல் 26ஆம் தேதி பதவி ஏற்ற நிலையில் 28ஆம் தேதி முதல் விடுமுறையில் சென்றுள்ளார்.