நெல்லை-ஊர்க்காவல் படை வட்டார தளபதி' பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நெல்லையில் ஊர்காவல் படை 'வட்டார தளபதி' பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகிறது.மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-05 07:52 GMT

வேலைவாய்ப்பு 

நெல்லை-ஊர்க்காவல் படை 'வட்டார தளபதி' பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகிறது.இது கௌரவப் பதவி என்பதால் ஊதியம் கிடையாது.மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்ட ஊர்க்காவல் படை பிரிவில் காலியாக உள்ள வட்டார தளபதி (Area commandar) பதவிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகிறது. கல்வித்தகுதி பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேல் படித்தவர்களாக இருக்க வேண்டும். வயது வரம்பு 21 முதல் 50 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

இது ஒரு கௌரவ பதவி என்பதால் ஊதியம் எதும் வழங்கப்படமாட்டாது. தேசிய மாணவர் படையில் பயிற்சிபெற்ற விரிவுரையாளர், ஆசிரியர்கள், மருத்துவர்கள், உயர்பதவி வகிப்பவர்கள் வட்டார தளபதி பதவியில் சேர்ந்து தொண்டு செய்ய விருப்பம் மற்றும் சேவை மனப்பான்மை உடைய ஆண்/பெண் நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

வட்டார தளபதி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது விண்ணப்பத்தை சுயவிவர குறிப்புடன் காவல் கண்காணிப்பாளர், திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி -627 002 என்ற முகவரிக்கு 11.06.2021ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். எனறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News