நெல்லை சிவபுரம் பாலர்வாடி பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிவபுரம் பாலர்வாடி பள்ளியில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் தேசிய கொடி ஏற்றினார்.
நெல்லை மீனாட்சிபுரம் சிவபுரம் பாலர்வாடி பள்ளியில் 75வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னி்ட்டு அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆவின் சேர்மன் சுதா கே. பரமசிவன், மாவட்ட அவை தலைவர், அறங்காவலர் குழு உறுப்பினர் பரணி ஏ. சங்கரலிங்கம் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி விழாவை சிறப்பித்தார்கள்.
விழாவில் பள்ளி தாளாளர் ரீனா துரை, ஆசிரியர்கள் மற்றும் தச்சை பகுதி அவை தலைவர் நைனா முத்து ராஜ், மாவட்ட பிரதிநிதி எஸ்.நல்லபெருமாள், பிிளம்பர் பரமசிவன்,ரவி.தீபன் ராஜா மற்றும் அ.தி.மு.க.நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.