பெண்களை இழிவாக பேசிய ஆ.ராசாவை கண்டித்து இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

நெல்லையில் இந்து மக்கள் கட்சியினர் ராசா எம்.பி.யை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-09-25 07:50 GMT

நெல்லையில் இந்து மக்கள் கட்சியினர் ஆ. ராசா எம்.பி.யை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்து பெண்கள், தாய்மார்களை விபச்சாரி என்று இழிவாக பேசிய தி.மு.க. அரசின் துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி தொகுதி எம். பி. யுமான ஆ. ராசாவை கண்டித்து நெல்லையில் இந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்டத் தலைவர் மாரியப்பன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது காரில் ஆ. ராசாவின் உருவப் பொம்மையை மறைத்து வைத்திருந்ததை அறிந்த காவல்துறையினர் உருவ பொம்மையை பறித்தனர். இதனால் இந்து மக்கள் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து இந்து மக்கள் கட்சியினர் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு ஆ ராசாவை கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

நெல்லை மாவட்ட இந்து மக்கள் கட்சி சார்பாக இளைஞரணி தலைவர் எஸ்.பி. ரமேஷ், சிறப்பு அழைப்பாளர் டி. கே. பி. ராஜா பாண்டியன், தென் மண்டல தலைவர் மாநில செயலாளர் முருகானந்தம், மாவட்டச் செயலாளர் லட்சுமணன், சட்டமன்ற தொகுதி தலைவர் பாக்கியசாமி எஸ். எம். கணேச பாண்டியன், ராம், பச்சையப்பன், சுடலைமணி, நாராயணன், ஆறுமுககுமார், உத்தமராமன், பசுபதி, மணிகண்டன், செல்வம், மாடசாமி, பாண்டி, இளையராஜா மற்றும்  இந்து மக்கள் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News