தன்னார்வலர்கள் தயாரித்து பொது மக்களுக்கு கபசுர குடிநீர் விநியோகம்.

பொது மக்களுக்கு கபசுர குடிநீர்

Update: 2021-05-09 11:15 GMT

10000 பேருக்கு கபசுர குடிநீர் பாளையங்கோட்டை தன்னார்வலர்கள் தயாரித்து பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் மாநகர பகுதிகளில் கபசுர குடிநீர் பொது மக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்ய தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அதனடிப்படையில்பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த்  தன்னார்வலர்கள் மூலமாக சுமார் 10000 பொது மக்களுக்கு இலவசமாக கபசுர குடிநீர் வழங்கினார்கள். உடன் சுகாதார ஆய்வாளர் நடராஜன், பெருமாள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்

கபசுர குடிநீர் தயாரிக்கும் பாளையங்கோட்டை மதரஸா பள்ளியில் உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த் ஆய்வு செய்தனர்

Tags:    

Similar News