கொரோனா வைரஸ் விழிப்புணர்வு தடுப்பூசி முகாம்

Update: 2021-04-16 07:15 GMT

திருநெல்வேலி ஸ்மார்ட் சிட்டி அரிமா சங்கம், காவலர் வாய்ஸ், தளபதி விஜய் மக்கள் இயக்கம், அலங்கார் சினிமாஸ் ரெட் ஷோன் உள்ளாடைகள் இணைந்து நடத்தும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு ஊசி முகாம் நடைபெற்றது.

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாம் திருநெல்வேலி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி ரயில்வே பணியாளர்கள்,அலுவலர்கள் 150 பேரும், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர் முகாமினை மாநகர காவல்துறை துணை ஆணையர் சீனிவாசன் துவக்கி வைத்தார்.பின்னர் நெல்லை மாநகர துணை கமிஷனர் சீனிவாசன் பேட்டியில் கூறியதாவது, கொரோனா பரவலை தடுக்க திருநெல்வேலி மாநகராட்சி, மற்றும் திருநெல்வேலி மாநகர காவல்துறை அறிவுறுத்தும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறோம். அனைவரும் ஒத்துழைப்பு தந்தால் தான் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும் என்று கூறினார்/

இந்நிகழ்வில் நெல்லை சந்திப்பு ரயில் நிலைய மேலாளர் முருகேசன்,லயன்ஸ் ஸ்மார்ட் சிட்டி கிங்ஸ் பட்டைய தலைவர் மணிகண்டன், பட்டைய செயலாளர் சங்கர வேலு, வாலேஸ்வரன் நெல்லை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் சஜி , இளைஞரணி தலைவர்ராஜகோபால், மாணவரணி தலைவர் ஜெயராம்ரெட் ஷோன் மாரியப்பன், உடையார், மின்னல் சிவா,நவாஸ் ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

Similar News