தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தினால் நடவடிக்கை: ஆட்சியர்

தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையினை பயன்படுத்தி மீன்பிடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என, நெல்லை ஆட்சியர் விஷ்ணு எச்சரித்துள்ளார்.

Update: 2022-01-20 06:45 GMT

ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு

இது தொடர்பாக, நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டம் மற்றும் விதிகள் 1983-ன்படி கடலில் சுருக்குமடி வலையினை பயன்படுத்தி மீன்பிடிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

எனவே திருநெல்வேலி மாவட்ட கடலோர மீனவ கிராமங்களான கூடுதாழை முதல்,  கூட்டப்புளி வரையுள்ள 7 மீனவ கிராமங்களில்,  அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையோ அல்லது அதனைச் சார்ந்த வளையமுள்ள வீச்சுவலையினை பயன்படுத்தியோ மீனவர்கள் மீன்பிடிக்க கூடாது என இதன் மூலம் தெரிவிக்கலாகிறது.

தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகள் பொது இடங்களிலோ / இல்லத்திலோ / மீன்பிடி கலனில் இருந்தால் பறிமுதல் செய்யப்படும். மேலும் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்தால் மீனவர்களின் வள்ளம், வலை மற்றும் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News