நெல்லையில் முன்விரோதம் காரணமாக இரு பிரிவினரிடையே மோதல், போலீஸ் எஸ்.பி பேச்சுவார்த்தை

நெல்லையில் முன்விரோதம் காரணமாக வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினார்.

Update: 2021-06-18 04:35 GMT

நெல்லையில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் சூழல், போலீஸ் குவிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் முன்னிர் பள்ளத்தில் நேற்று இரவு கால்வாயில் குளிக்க சென்ற பால மகேஷ் என்ற வாலிபரை மற்றொரு பிரிவினர் அரிவாளால் வெட்டி உள்ளனர்.

இதில் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் வீடு,வாகனங்களை சேதப்படுத்தி வைக்கோல் படப்பை தீ வைத்துத்தனார்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று காலை இரு தரப்பினரும் தங்கள் பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பாளர் மணிவண்ணன் இரு தரப்பினரிடமும் தனித்தனியே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு குற்ற செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் சம்பவம் தொடர்பாக சிசிடி வீடியோ காட்சிகள் கிடைத்துள்ளது அதன் அடிப்படையிலும் குற்றவாளிகளை கைது செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்ததின் பேரில் தற்போது இரு தரப்பினரும் கலைந்து சென்றுள்ளனர்.

Tags:    

Similar News