100% வாக்குப்பதிவு -விஜய் ரசிகர்கள் விழிப்புணர்வு

Update: 2021-03-23 07:00 GMT

திருநெல்வேலியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கலை நிகழ்ச்சிகள் ,வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருநெல்வேலியில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி நடிகர் விஜய் ரசிகர்கள் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு விழா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருநெல்வேலி மாநகர காவல் உதவி ஆணையர் சதிஷ்குமார் முன்னிலையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாநகர காவல் துணை ஆணையர் ஸ்ரீனிவாசன் துவக்கி வைத்தார்.மாநகர காவல் துணை ஆணையர் முன்பு ஏராளமான ரசிகர்கள் வாக்களிப்பது நமது கடமை,100 சதவீதம் வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களை கவரும் வகையில் நாட்டு மேளம், கரகம், சிலம்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் தியேட்டர் முதல் திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் வரை வாக்காளர் விழிப்புணர்வு பேரணி காவல் துணை ஆணையர் தலைமையில் நடைபெற்றது. பேரணியில் நடைபெற்ற கரகாட்டம், சிலம்பாட்டம் போன்றவை பார்வையாளர்களையும் பொது மக்களையும் வெகுவாக கவர்ந்தது. விழா ஏற்பாடுகளை ராம் சினிமாஸ் உரிமையாளர் ராமசாமி ராஜா, திருநெல்வேலி மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைமை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News