நெல்லையில் வார்டு 15 முதல் 27 பகுதிகளுக்கு 2 நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கொண்டாநகரம் நீரேற்று நிலைய சீரமைப்பு பணியால் வார்டு 15 முதல் 27 வரையிலான பகுதிகளுக்கு 2 நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்.

Update: 2022-05-09 14:38 GMT

திருநெல்வேலி மண்டலம் வார்டு எண் 15 முதல் 27 வரையிலான பகுதிகளுக்கு 10-05-22 மற்றும் 11-05-22 (செவ்வாய்கிழமை, புதன் கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் குடிநீர் வழங்க இயலாது திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணு சந்திரன் தகவல்.

திருநெல்வேலி மாநகராட்சி, திருநெல்வேலி மண்டல பகுதிக்குட்பட்ட வார்டு எண் 15 முதல் 27 வரையான பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் கொண்டாநகரம் தலைமை நீரேற்று நிலையத்தின் அருகில் 600mm பிரதானக் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

மேற்படி உடைப்பு சரி செய்யும் பணி 10-05-2022 அன்று நடைபெற உள்ளதால் திருநெல்வேலி மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண் 15 முதல் 27 வரையான பகுதிகளுக்கு 10-05-22 மற்றும் 11-05-22 ஆகிய இரண்டு நாட்கள் (செவ்வாய்கிழமை- புதன்கிழமை) குடிநீர் சரியாக விநியோகம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News