நெல்லைமாவட்டத்தி்ல் நதிநீர் இணைப்புதிட்டத்தை சபாநாயகர் ஆய்வுசெய்தார்

விவசாயிகள் பயன்படும் வகையில் நதிநீ்ர் இணைப்புத்திட்டம் நிறைவேற்றப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-21 08:39 GMT

 நதிநீர் இணைப்பு திட்டபணிகள் - சபாநாயகர் அப்பாவு ஆய்வு.

தாமிரபரணி ஆறு , நம்பியாறு, மற்றும் கருமேனியாறு இணைப்புத் திட்டப் பணிகள் 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.விவசாயிகள் பயன்படும் வகையில் திட்டம் நிறைவேற்றப்படும் என நெல்லையில் நதிநீர் இணைப்புத் திட்டபணிகளை ஆய்வு செய்த தமிழக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார் .

தாமிரபரணி - நம்பியாறு- கருமேணி ஆறு இணைப்பு திட்டத்திட்டம் கடந்த திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டு மூன்று கட்டப்பணிகள் முடிந்து தற்போது 4 ம் கட்ட பணிகள் ஆகஸ்ட்மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது

இந்த பணிகளை சபாநாயகர் அப்பாவு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்கவும் பணிகளில் உள்ள இடர்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் 2008-09 ம் ஆண்டு திமுக ஆட்சியில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போதைய முதலமைச்சர் மு க ஸ்டாலின் திட்டத்தை விரைந்து முடிக்க அறிவுறுத்தியுள்ளார்.


நான்காம் கட்ட பணிகளில் நான்கு வழிச்சாலை குறுக்கே பாலமும், ரயில்வே பாலமும் அமைக்கப்பட உள்ளது.15 கோடி மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு விரைவில் பணிகள் தொடங்க உள்ளது. 4-ம் கட்ட பணிகளில் நடைபெறவிருக்கும் பாலப் பணிகள் ஜூன் மாதம் தொடங்க உள்ளது. நதிநீர் இணைப்புத் திட்ட பணிகள் 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.

வரும் வடகிழக்கு பருவ மழைக்கு முன்னதாக பணிகள் நிறைவு பெற்று விவசாயிகள் பயன்படும் வகையில் திட்டம் செயல் படுத்த படும். இந்தத் திட்டம் தொடங்கும்போது 369 கோடி ரூபாயில் இருந்த நிலையில் தற்போது 900 கோடியில் மதிப்பீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு நிலம் வழங்கிய நபர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்க முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும் என தெரிவித்தார். இந்த ஆய்வில் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் மற்றும் பொதுப்பணித்துறை,ரயில்வே துறை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News