பொங்கல் வசூல் திமுக பிரமுகர் மீது புகார்

Update: 2021-01-08 10:15 GMT

தூத்துக்குடியில் பொங்கல் பரிசு அன்பளிப்பு வசூல் செய்த திமுக பிரமுகர் மீது புகார் அளிக்கப்பட்டது.

தமிழக அரசின் ரூ. 2500 ரொக்க பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை தூத்துக்குடி பிஅன்டி காலனியில் உள்ள நியாயவிலை கடையில் முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் வழங்கினார். உடன் அதிமுக அமைப்பு செயலாளர் தூத்துக்குடி மாவட்ட ஆவின் சேர்மன் சின்னத்துரை, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொருளாளர் அமலி ராஜன்,பகுதி செயலாளர்கள் சேவியர் முருகன்,அம்மா பேரவை மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அரசு வழங்கிய 2500 ரூபாயில் அந்த பகுதி திமுக வட்ட செயலாளர் கண்ணன் என்பவர் அன்பளிப்பு வசூலிப்பதாக புகார் தெரிவித்தனர். சிப்காட் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதற்கு உடந்தையாக இருந்த அந்த கடையின் விற்பனையாளர் சுந்தர் மற்றும் எடையாளர் நடராஜன் ஆகியோர் குறித்து வட்டார வழங்கல் அதிகாரியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

Tags: