சுரண்டை நகராட்சியில் தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் வாக்களிப்பு

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சுரண்டை நகராட்சியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் வாக்களித்தார்.

Update: 2022-02-19 04:48 GMT

தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் 3-வது வார்டு பகுதி சமுதாய நலக்கூடத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சுரண்டை நகராட்சியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் வாக்களித்தார்.

தென்காசி மாவட்டத்தில் பேருராட்சியாக இருந்து நகராட்சியாக மாற்றப்பட்ட சுரண்டை 27 வார்டுகளை கொண்டது. இங்கு முதன் முறையாக நகராட்சி தேர்தல் நடைபெறுகிறது. இங்கு 14377 ஆண் வாக்களர்களும், 29320 பெண் வாக்களர்களும் உள்ளனர். 38 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

நகராட்சியாக மாறிய பிறகு நடைபெறுகின்ற முதல் தேர்தல் என்பதால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே போல் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் 3-வது வார்டு பகுதி சமுதாய நலக்கூடத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தேர்தல் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News