தென்காசி அருகே ஊராட்சி தலைவர் வேட்பாளருக்கு பத்திரிக்கையாளர்கள் வாக்கு சேகரிப்பு

சுமை தீர்த்த புரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு போட்டியிடும் பத்திரிக்கையாளர் ஜீவாவிற்கு பத்திரிக்கையாளர்கள் வாக்கு சேகரித்தனர்.

Update: 2021-10-07 17:47 GMT

சுமை தீர்த்த புரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு போட்டியிடும்  ஜீவாவிற்கு வாக்கு சேகரித்த பத்திரிக்கையாளர்கள்.

தென்காசி ஊராட்சி ஒன்றியம்சுமை தீர்த்த புரம் ஊராட்சி ஒன்றியதலைவர் பதவிக்கு போட்டியிடும் பத்திரிகையாளர் ஜீவாவை ஆதரித்து தென்காசி மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் நிர்வாகிகள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இன்று ஈடுபட்டனர்.

கொட்டாகுளம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பத்திரிக்கையாளர்கள் துண்டு பிரசுரம் கொடுத்தும் பெரியவர்களை வணங்கியும் வீடு வீடாகச் சென்று சக நண்பர் ஜீவாவிற்கு வாக்கு சேகரித்தனர்.

இந்த நிகழ்வில் ஏஜிஎம் கணேசன், சங்கர், பாலசுப்பிரமணியன், மாரியப்பன், பிரமநாயகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News