தென்காசியில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகள்: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்

Sports News Today in Tamil -தென்காசியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Update: 2022-06-18 02:49 GMT

தென்காசியில் தமிழ்நாடு சதுரங்க கழகம் சார்பில் 2 நாட்கள் நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Sports News Today in Tamil - தென்காசி மாவட்டம் தென்காசி இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி கூட்டரங்கில் தமிழ்நாடு சதுரங்க கழகம் சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு இரண்டு நாட்கள் போட்டிகள் நடைபெற்றது.

இந்த போட்டிகள் 15 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் மட்டுமே பங்கு பெறும் வகையில் நடத்தப்பட்டது.

மாவட்டத்தில் இருந்து 7 அரசுப் பள்ளி, 21 தனியார் பள்ளி என மொத்தம் 28 பள்ளிகளில் இருந்து 140 மாணவர்கள், 30 மாணவிகள் என மொத்தம் 170 பேர் பங்கேற்றனர் நேற்றும், இன்றும் மொத்தம் 9 சுற்றுகளாக போட்டி நடைபெற்றது. போட்டிகளுக்கு சர்வதேச நடுவரான பழனியப்பன் நடுவராக பங்கேற்றார்.

போட்டிகளில் ஆண்கள் பிரிவில் கார்த்திக் ராகுல் முதலிடத்தையும் விஜயேஸ் இரண்டாமிடத்தையும், வரதராஜன் மூன்றாமிடத்தையும் பெற்றனர். பெண்கள் பிரிவில் அனுஜா முதலிடத்தையும், வேல்விழி இரண்டாமிடத்தையும், ஹரி நந்தனா மூன்றாம் இடத்தையும் பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தென்காசி கல்வி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் பரிசுகளை வழங்கினார் அதனைத் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News