சொத்து பிரச்சனையில் தம்பியை வெட்டிய அண்ணன் கைது

Update: 2021-04-09 07:00 GMT

தென்காசியில் சொத்து பிரச்சனையில் தம்பியை வெட்டிய அண்ணன் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழப்புலியூரில் வசித்து வரும் ராமையா என்பவரின் மகன்களான சிதம்பரம்(49) மற்றும் அவரது தம்பி முத்துக்குமார்(37) ஆகியோரிடையே சொத்து பங்கு வைப்பதில் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்த முத்துக்குமாரிடம் அங்கு வந்த அவரின் அண்ணனான சிதம்பரம் பிரச்சனை செய்து தன் கையில் வைத்திருந்த அரிவாளால் கழுத்தில் வெட்ட முயன்றபோது முத்துக்குமார் தனது கையால் தடுத்ததால் கையில் பலத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து முத்துக்குமார் தென்காசி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மேற்படி சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்.

Tags:    

Similar News