சாலையில் வாலிபால்

சிவகங்கை காந்தி வீதியில் கொரோனா ஊரடங்கின்போது, சாலையில் வாலிபால் விளையாடி மகிழ்ந்த சிறுவர்கள்

Update: 2021-04-25 12:09 GMT

வெறிச்சோடிய சாலையில் விளையாடி மகிழ்ந்த சிறுவர்கள்

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை கடுமையாகப் பரவி வரும் சூழ்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிவகங்கை நகரில் உள்ள முக்கிய வீதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு மக்கள் நடமாட்டமின்றி, வாகனங்களின் போக்குவரத்து இன்றி சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. 

இச்சூழலில் சிவகங்கை காந்தி வீதியில், அப்பகுதி சிறுவர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் பொழுதுபோக்காக நோய் தாக்கத்தின் கடுமையை உணராது பயமின்றி வாலிபால் விளையாடி ஓடியாடி மகிழ்ந்தனர். இளம் கன்று பயமறியாது என்பதற்கு சான்றாக இந்நிகழ்வு அமைந்து இருந்தது

Tags:    

Similar News