பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டினால் 24 மணி நேரத்தில் நடவடிக்கை - எஸ்.பி

பெண்களை ஆபாசமாக படம் எடுத்து ஃபேஸ்புக்கில் வெளியிடுவதாக மிரட்டினால் 24 மணி நேரத்தில் படத்தை அழித்து விடலாம் மாவட்ட SP பேட்டி.

Update: 2021-08-07 14:47 GMT

பெண்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டினால்  உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் பேட்டி.

சிவகங்கை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் செய்தியாளர் சந்திப்பில், பெண்கள் யாரேனும் அவர்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்து அல்லது பாலியல் ரீதியாக புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டினால், பயப்படாமல் வேறுமுடிவுகள் எடுக்காமல் தைரியமாக வந்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் அல்லது என்னிடமும் வந்து நேரடியாக புகார் அளிக்கலாம்.

சமூக வலைதளங்களில் அப்படி ஏதேனும் தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தால் 24 மணி நேரத்தில் அதை அகற்றி விடலாம் ஆன்லைன் மூலமாகவும் புகார் அளிக்கலாம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தியாளர் சந்திப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.

Tags:    

Similar News